Saturday 6 December 2014

Sema Varigal..!

என்னால் தான் வர வரும் ..!

Love kavithaigal in tamil
Love kavithaigal in tamil

உன் கண்களிலிருந்து 
கண்ணீர் வர வேண்டும்
சோகத்தினாலோ
வலியினாலோ அல்ல     
சந்தோசம் தாங்கமுடியால் ..!

ஆனால்
நீ சிந்தும்
ஒவ்வொரு துளியும்
என்னால் தான் வர வரும் ..!

வீசும் திசையெல்லாம்..!

திசை தெரியாமல்
அலையும் பைத்தியக்காரனை போல
என் மனம்
அலைந்து தெரிகின்றது
உன் சுவாச காற்று
வீசும் திசையெல்லாம்..!

கார்த்திகை திருநாளில்...!

ஒரு கார்த்திகை திருநாளில் 
நீ  எண்ணெய் ஊற்றி 
விளக்கேற்றினாய்..!
உன் பிம்பம்
என் இதயத்தில் ஏறியது
தீப ஒளியாக ..!

Nam Kadhal..!

நம் காதல்..!

Tamil Kadhal Kavithaigal
Tamil Kadhal Kavithaigal

நீ தூங்குகிறாய்
எல்லா அழகுகளுடனும் ..!
நான் ரசிக்கிறேன்
நிறைய கனவுகளுடன்..!

உன் கண்களை மூடி
என் மனதால் கனவு
காண்கிறது நம் காதல்..!


Painful Line..!

அன்பே,
நீ கோபமாய் பேசி சென்றாய்..!
உன் நினைவுகள்
சாந்தமாய் கொல்கின்றன..!
நீ பேசி கொடுத்த
வலியை விட உன் நினைவுகள்
அதிகமாய் கொடுக்கின்றன..!


உன் கூந்தல்..!

பெண்களின் கூந்தலில்
பூவாசனை வீசும்
அது உலகிற்கு தெரியும்..!

இந்த பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது..!

Tamil love Sms Kavithai..!

புதைந்தது கிடக்கின்றன..!

Tamil love Sms Kavithai in Tamil
Tamil love Sms Kavithai in Tamil

நீ என் கண்களுககுள் 
இருக்கையில்
எனக்கொரு
சின்ன சந்தேகம் உண்டு..!

எவ்வளவு துரு துருவான 
பெண் நீ
இப்படி அடக்கமாய் 
இருக்கிறாய் என..!

பாரேன்,
இந்த காதலுக்குள்ளும் 
உனக்குள்ளும்
என்னென்னவெல்லாம் 
புதைந்தது கிடக்கின்றன..!


பதிவு செய்ய..!

அன்பே..!
உன் வரவை எதிர்நோக்கி
இமை இமைக்காமல் என் விழிகள் 
காத்து கிடக்கின்றன..!
உன் பிம்பத்தை படமெடுத்து 
என் இதயத்தில் பதிவு செய்ய..!


உணர முடியும்..!

பெண்ணே,
காதலால் வரும் வலிகளை
வெறும் வார்த்தைகளை கொண்டு 
சொல்லி விட முடியாது..!
அது கதை அல்ல
கருப்பு காவியம்..!
அதை நீ சந்தித்தால்
மட்டுமே உணர முடியும்..!

Sweet Love Line..!

தாங்க முடியாது உன்னால் ..!

Kadhal(Love) kavithai in Tamil
Kadhal(Love) kavithai in Tamil

உன் புருவங்களின் நெளிவுகளிருந்து 
இதழ்களின் அழகிலிருந்து
கூந்தலின் அசைவிலிருந்து
கொலுசுகள் சிணுங்களிலிருந்து
நான் கற்று கொண்ட
உனக்கான காதலை
உன்னிடம் தர ஆரம்பித்தால்
தாங்க முடியாது உன்னால் ..!

ஒரு கருவானது..!

அன்பே,
நீயும்  நானும்
நம் காதலுக்க்கான
கவிதை வடித்தோம்..!
உன் பெயரை நானும்
என் பெயரை நீயும் வரைந்ததால்
இரண்டு வார்த்தை கவிதை
ஒரு கருவானது..!

நீயும் ஆவாய் ..!

இந்த காதல்  மட்டும் வந்தால் போதும் ..!
நதியாக அவளும், கரையாக நீயும்
விரலாக அவளும், நாகமாக நீயும்
கவிதையாக அவளும், கற்பனையாக நீயும்
விழியாக அவளும், இமையாக நீயும்
முத்தமாக அவளும், சப்தமாக நீயும் ஆவாய் ..!

Saturday 15 November 2014

Super Dreams..!

சிறகடித்து நீ பறக்க..!

Kadhal Love kavithai in Tamil
Kadhal Love kavithai in Tamil

வானவில்லாய் நீ  வந்தால்
வண்ணமாக நான்,
அழகாய் நீ இருக்க..!
மானாய் நீ வந்தால்
காடாக நான்,
துள்ளி குதித்து நீ ஓட..!
மயிலாய் நீ வந்தால்
தோகையாக நான்,
அழகாக நீ ஆட..!
பட்டாம்பூச்சியாய் நீ வந்தால்
சிறகாக நான்,
சிறகடித்து நீ பறக்க..!


காதலி மடியில்..!

முதல் முறையாக
மடியில் தலை வைத்து
படுக்க வேண்டுமென்ற போது 
என் என்று கேட்டாய்..!

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
காதலி மடியில்
படுத்து உறங்க வேண்டுமென்பது
என் ரொம்ப நாள் ஆசை
அது உன் மடியாயிற்று..!
அவ்வளவு தான்..!


Feeling Varigal..!

நெஞ்சம் ஏங்குகிறது..!

Tamil Love Kavithai
Tamil Love Kavithai

நீயும் நானும்  போகும் போது
அந்த பாதை இன்னும் 
நீள வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குகிறது..!

இருந்து விடாதே..!

அன்பே,
நான் தனியாக கூட 
வாழ்ந்து விடுவேன்
ஆனால்,
வாழ்க்கை துணையாக
வருகிறேனென்று
சுமையாக மட்டும் 
இருந்து விடாதே..!

இமை மூடினேன்..!

காதலிக்கும் போது 
நான் எனக்காக மட்டும்
காதலிக்கவில்லை..!
அவளுக்கான காதலையும் 
சேர்த்தே காதலித்தேன்..!
அவளுக்கான கனவையும் 
நானல்லவா இமை மூடாமல் கண்டேன்..!
தனக்கானதை யோசித்து 
பிரிந்து சென்ற போது
அவளுக்காக இமை மூடினேன்..!

Sad Varigal..!

கருவிழிகளால் அல்ல...!

Sad Varigal..! Tamil Kavithai For Sad
Sad Varigal..! Tamil Kavithai For Sad

இரவில் கண் மூடியும் கூட
உன் முகத்தையே  பார்க்கிறேன்
கருவிழிகளால் அல்ல...!
மனவிழிகளால் .!


நம்பிக்கையில் தான்..!

அன்பே,
நம் பிரிவை நான்
தங்கி கொண்டிருப்பதன் காரணம்
நீயும் அதை
எண்ணி வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..!

Saturday 8 November 2014

Valimaiyana Words..!

மீண்டும் வளருவேன் ..!

LOVE FAILURE BOY WORD
LOVE FAILURE WORD

உன் கூந்தலில் உள்ள
பூவாக மாறி நீ
தூக்கி எறிந்தாலும் வரை உன்னை
காதலிப்பேன்-உன்
விரலில் நாகமாக மாறுவேன்
என்னை வெறுத்து வெட்டினாலும்
மீண்டும் வளருவேன் ..!


இதயம்..!

உன்னை
நினைத்து நினைத்து
ஒருநாள்
துடிப்பதை மறந்து
விட போகிறது
என் இதயம்..!

Kaalai Vankkam Sol..!

வாழ்ந்து விடு..!

Good Morning Kavithai, Kalai vanakkam Kavithai
Good Morning Kavithai

நல்லவன் என்ற பெயரை
மட்டும் எடுத்து விடாதே பிறகு
ஆயுள் முழுவதும் நல்லவனாக
நடிக்க வேண்டும்..!
கெடடவன் என்ற பெயரோடு
வாழ்ந்து விடு..!
நல்லவனாக..!
Kaalai Vankkam..!

ஊக்கமே சிறந்தது..!

வென்ற பிறகு கிடைக்க்கும்
பாராட்டை  விட
வீழ்ந்த உடன் கிடைக்கும்
ஊக்கமே சிறந்தது..!

Kaalai Vankkam..!


Wednesday 30 July 2014

Love U Friendship Kavithai Collections

Love U Friend

Friendship Day Kavithai
Friendship Day Kavithai

"பிறக்கும்" போதே
உன் அன்பை பெற வேண்டும்
"இறக்கும்" வரை
உன் நினைவில் வாழ வேண்டும்
"மறக்கும்" நிலை வந்தால்
மரணம் ஒன்றே வேண்டும்
Love U Friend


Lovely Friendship Day SMS:

விண்ணில் நிலவுக்கும்
ஒரு நாள் விடுமுறை உண்டு..!
ஆனால்
எண்ணில் உன் நினைவுக்கு
என்றும் விடுமுறை இல்லை..!
Good Morning.. 


இப்படிக்கு நட்பு

நான் காற்று மாதிரி
நான் இருப்பது உங்களுக்கு தெரியாது
ஆனால் நான் இல்லாமல்
உங்களால் வாழ முடியாது..!
இப்படிக்கு
நட்பு..!

தொலைவுகள் கூட சுகமானதே..!

நட்பு கொண்ட இருவர்
அருகில் இருந்தாலென்ன?
தொலைவில் இருந்தாலென்ன ?
தொலையாத  நினைவுகள்
இருவருள்ளும் இருக்கும் வரையில்
தொலைவுகள் கூட சுகமானதே..!

இருந்திருப்பேன் என்று..!

பூக்களுக்கு பேச தெரியாது
தெரிந்திருந்தால் சொல்லிவிடும்
உன்னை போல் ஒரு நண்பன்
எனக்கும் கிடைத்திருந்தால்
தினம் தினம் வாடாமல்
இருந்திருப்பேன் என்று..!

FRIENDSHIP KAVITHAI:

இதயத்தில்
நட்பு இருந்தால்
மறந்து விடலாம்..!
உன் நட்பு தான்
என் இதயம்
என்றால் எப்படி
உன்னை மறக்க முடியும்..!

Good Morning..!

Cute Friendship Line:

நட்பின் உருவம்
என்னவென்று
தெரியாமல் அலைந்தேன்
உன்னை காணும்
நிமிடம் வரை
My Dear..!

Saturday 19 July 2014

Super Punch

எந்த பிழையை
நீ எங்கே கண்டாலும்
அது உன்னிடம் இருந்தால்
திருத்திக்கொள்..!


சென்ற இடமெல்லாம் தன் வாசனை
வீசுவது பூவின் குணம்..!
கண்ட இடமெல்லாம் தன் புராணம்
பேசுவது பெண்ணின் குணம்..!


PUNCH:
சுண்ணாம்பு  அடிக்காத சுவரும்..
பவுடர் அடிக்காத பிகரும்,
வெள்ளையா இருந்ததா
சரித்திரமே இல்ல..!


Super Punch:
அதிகமா “மேக்கப்” போடுற பொண்ணும்,
ரொம்ப நாளா டீ கடையில பேக்கப் ஆவுற
“பன்னும்” நல்லா இருந்ததா
சரித்திரமே இல்ல..!

Lovely Friends

10 வருடங்கள்
ஆனாலும்
'hai'னு சொல்றது friend..!
ஆனால்,
10 நிமிடங்கள்
தாமதம் ஆனாலும்
'bye' னு சொல்றது lover..!

So don't miss
your lovely friends.:-



Natpu..!
நத்தைக்கு வீடு
தன் முதுகில்,
நம் நட்புக்கு கூடு
ஏன் நெஞ்சினில்..!


Good Even...

Uyir Thuli Friendship Kavithai

Nice Friendship Kavithai:
"விழுந்த உடன் 
மறைந்து போக
நான் மழை துளி இல்லை..

உன்னுடன் இறுதி வரை
இருக்கும் உயிர் துளி"


"Friends" என்பது
மச்சம் மாதிரி
சாகுறவரை போகாது.
"love" என்பது
Cancer மாதிரி
சாகடிக்காமல் போகிறது...
So Be Careful to you.


காயப்படுத்த பலர்
இருந்தாலும் மருந்தாக
உன்னை போல்
சிலர் இருப்பதாலேயே
என் வாழ்கை
அடுத்த கட்டிடத்தை
நோக்கி பயணிக்கிறது..!

Good Morning..!

Love (kadhal) SMS

"இமைகள்" இமைக்கும் போது
உன் முகம் மறைந்தாலும்,
என் "இதயம்" துடிக்கும் ஒவ்வொரு  துடிப்பும்
உனக்காக..!
உன் அன்புக்காக என்றும்.
துடித்துக்கொண்டே இருக்கும்..!


விதிகளை மீறி..!
நீ தொலைவில் வந்த போது
பார்த்து ரசித்த கண்கள்,
அருகில் வந்த போது
ஜில்லென்று ஆன கைகள்,
நீ திரும்பி பார்த்ததும்
துள்ளி குதித்த இதயம்,
பேச வந்ததும்
வியர்த்து தள்ளிய முகமென,
அனைத்தும் தாறுமாறாய்
இயங்குகின்றன விதிகளை மீறி..!


உன் அன்பால்..!
உன் இமைகளால்
என்னை தாங்கினால்   
என் ஆயுள் கொஞ்சம் நீளுமடி..!

உன் இதயத்தில்
என்னை ஏந்தினால்
இரவுகள் எனக்கு இல்லையடி..!

உன் அன்பால்
என்னை நனைத்தால்
என் ஜென்ம பாவம் நீங்குமடி..!

அன்பே..!
வெட்கம் விட்டு சொல்கிறேன்
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..!

Friday 30 May 2014

Theriyaamal..!

கனவாகி போன
அவளுக்காக கவிதையோடு
வாழுகிறேன்..!

காலம் கரைவது கூட
தெரியாமல்..!



நிழலை அணைக்கின்றேன்..!

என் இதய கூண்டுக்குள்
யாரோ ஒருத்தி
மாட்டிக்கொண்டதாய் உணர்கிறேன்..!
என் கண் இமைகளில் அவள்
ஊஞ்சல் ஆடுவதை ரசிக்கின்றேன்..!
என் சுவாசத்தில்
கலந்து தும்சம் செய்யும்
அவள் வாசத்தை முகர்கின்றேன்..!
என் மனவாசலில்
வந்து வந்து செல்லும்
அவள் நிழலை அணைக்கின்றேன்..!

Kavithaigal About Love

அவள் என்னை
வெறுத்த பின்னாலும்
நான் அவளை நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா..?

ஏனென்றால்,
அவள் தாய் அவளை
வயிற்றில் சுமந்தாள்..!
ஆனால்
நானோ அவளை இதயத்தில்
அல்லவா சுமந்தேன்..!


காதல் கடிதம்..!
உன் மனத்திலுள்ளதை
எனக்கு சொல்லாமலே சொல்லியது,
உன் கைகளால் கசக்க படைத்தும்,
கடமை முடிந்ததும் கழிக்க படடதுமான 
என் காதல் கடிதம்..!

Love Kavithai..!

உன்னை காண
முடியாத நேரங்களில்
எல்லாம் உளறுகிறேன்..!

அதை கவிதை என்ற ஊர்
என்னையும் "கவிஞன்"
என்றதால் வியக்கிறேன்..!


மூச்சி..!
மூச்சி நின்றாள்
மட்டும் மரணம் இல்லை..!
உன்னுடனான பேச்சி
நின்றாள் கூட
மரணம் தான் எனக்கு..!


நான்..நீ..நிழல்..நிஜம்..!!
நான் நிஜமாக  இருந்ததால்
உன்னை நிழலாக 
தொடர்ந்து காதலித்தேன்..!
நான் நிழலாக 
பின்தொடர்ந்ததால் தானோ 
நீ நிஜமாக 
என்னை காதலிக்கவில்லை..!

Thursday 29 May 2014

True Love..!

உன்னை பார்த்து ரசித்த
கண்களோ சோகப்பட்டது..!
உன்னை எண்ணி நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீர் வடிகின்றது..!
கண்கள் சிவகின்றது..!

உன்மேல் காதல்
கொண்ட இதயமோ
பாவப்பட்ட்து..!
ஏனெனில்
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!

Love(kadhal) Sms

உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான் தெரியும்
நினைவுகளின் வலிமை.!

I Love You..!



உன் சுவாசத்தையும்..!
காற்றும் மணக்கிறது!
காரணம்,
அது உன் சுவாசத்தையும்
சேர்த்து சுமந்து வருகிறதே
அதனால் தான்…!


உன் நிழலை..!
சொல்லிவிட எண்ணி
பல நாள் அருகில் வருவேன்..!
உந்தன் பார்வை பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து விலகி விடுவேன்..!
என் மனதில் உள்ளது
தெரிந்தும் விளையாடும் பாவையே,
நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை..!

I Love You

Birthday Wishes Collections

நீ பிறந்தநாள்..! 

Birthday Wishes Collections
Birthday Wishes Collections

பூ மணம் மாறாத பூவொன்று 
பூமியில் மலர்ந்த நாள் இன்று..!
வான்மண்டலம் சாராத நிலவொன்று
மண்ணில் தோன்றிய நாள் இன்று..!
கை நீட்டி வாழ வழி காட்டிய வசந்த நாள் 
நாள்காட்டியில் நீ பிறந்தநாள்..! 
பிறப்பின் நொடிகள் மிகவும் வலியானது..!
அதை மீண்டும் காலத்தின் ஓட்டத்தால் 
அடையும் போது மிகவும் அழகானது..! 
இதயத்தில் எழுதிய என் கவிதையே
உன்னை என்றும் என் வரிகள் வாழ்த்தும்..! 
உன் பிறந்தநாளில் ரோஜாவை
உனக்கு பரிசளிக்க விரும்பினேன்- ஆனால்
உன்னை வைத்து கொண்டு 
ரோஜாவை நான் எங்கே போய் தேடுவேன்..! 
அனைத்து நாட்களும் 
நீ பிறந்தநாளை பார்த்து பொறாமைப்படுகின்றன 
நம்நாளில் இவள் பிறக்கவில்லையே என்று..!
வருடத்தில் பல வண்ண பூக்கள் மலரும்
அதில் ஓன்று விடியலில் மலர்ந்த பூ நீயோ..!
தென்றல் காற்றால் மலர்களை உதிர்த்து,
பகலில் வெண்ணிலவை அழைத்து,
இதயத்தால் பெண்ணிலவு உன்னை வாழ்த்துகிறேன்..! 

மரித்து போவதால்..!

எனக்கு தினம் தினம்
பிறந்த நாள் தான்..!
ஒவ்வொரு நாளும்
உன் கண்ண குழியில்
மரித்து போவதால்..!

என் முதல் கவிதை..!

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடி தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் முதல் கவிதை..!

I Love You..!


நீ..!

நானாக நீயிருந்து,
நீ இல்லாமல்,
நான் படும்
வேதனையை,
உணர வேண்டும் நீ..!

LOVE

எனக்கு பூவாக
மலர வரம்
கிடைத்தால் ரோஜாவாகவே
மலருவேன்..!

வேறு பூவாக
அல்ல..!

என்னவளின்
தலையிலாவது
இருப்பேன் அல்லவா..!


ஆயுள் குறைவு..!
Love Failure Boys Words:
காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ
தெரியவில்லை
"பெப்ரவரி"
மாதத்துக்கும் கூட
ஆயுள் குறைவு..!

Love(Kadhal) Sms In Tamil

நீ என்னை கடக்கும்
ஒரு நொடிக்காக காத்திருப்பேன்
பெண்ணே..!
காணலாக அல்ல..!
உன் பாதங்களை வருடும்
நாணலாக..!

என் ஓட்டம்..!
என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊசலாடுபவளே..!
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் என் ஓட்டம்..!


Be careful..!
வார்த்தை தடுமாற
காரணம் கண்கள்,
வாழ்க்கை தடுமாற
காரணம் “பெண்கள்”…
Be careful..!



Love Failure SMS

பிறக்கும் போது
அறியாத வலியும்..!

இறக்கும் தெரியாத
வலியும்..!

நீ என்னை
வெறுக்கும் போது
தெரிந்து கொண்டேன்..!


தாடி..!!
Feeling Corner :
அவள் முத்தமிட்ட இந்த
கன்னங்களில் யாரும் முத்தம்
இடக்கூடாது என்பதற்க்காக
நான் அமைத்த முள் வேலி தான்
இந்த தாடி..!!

Friday 16 May 2014

LOVE FAILURE(KADHAL THOLVI) SMS

உன்னை 1000 பேர்
நினைக்கலாம்..!
ஆனால்
உனக்காக துடிக்கும்
என் இதயத்தை
நீ நினைக்கவும் இல்லை
நேசிக்கவும் இல்லை..!


உணர்ந்தேன்..!
காதல் கசக்கும்
மருந்தென்று தெரியும்..!

ஆனால்
உயிரை பறிக்கும்
விஷம் என்பதை
நீ ஏமாற்றிய
நாட்களில் தான்
உணர்ந்தேன்..!


எருக்கம் பூவாக..!
உன் தலையில்
ரோஜா மலராக
என் நினைவுகள்
இருக்குமென்று விரும்பினேன்..!
ஆனால்,

என் கல்லறையில்
அல்லவா இருக்கின்றன  
எருக்கம் பூவாக
உன் நினைவுகள்..!

வலிமை..!
உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான்
நினைவுகளின் 
வலிமை..!

Wednesday 7 May 2014

LOVE SMS

தொடர வேண்டும்..!

Tamil love kavithai sms
Tamil love Kavithai SMS

கண் விழிக்க ஆசை இல்லை
என் கனவில் நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை வெறுக்கிறேன்,
விடியாத இரவும்
முடியாத கனவும் வேண்டும்..!
உன்னை கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்..!


யார் அழகு..!

என் பல நாள்
ஆசைகளில் ஓன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்,
உன்னை வைத்துவிட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!




Wednesday 30 April 2014

MAY DINA KAVITHAI..!

உலகின் படைப்புகளெல்லாம்
உழைப்பின் சிதறல்கள்..!
மண்ணின் ஈரங்களில்
மனிதனின் வியர்வை துளியும் சில உண்டு..!
கடலின் நீலங்களில்
மக்களின் கண்ணீர் துளிகள் பல உண்டு..!
இந்த உலகத்திலிருந்து
உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை மதிப்போம்..!
உலகை காப்போம்..! 

Tuesday 15 April 2014

KADHAL SMS Aval Pesiyathu..!

அவள் பேசியது
என்னவோ
ஒரே ஒரு வார்த்தை தான்..!

ஆனால்,
எனக்குள் பிறந்ததோ
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்..!


பிடிக்கவில்லை.!
அவளை காதலிக்கும்
போது எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்,
அவள் போன பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை.!

Feel My Love..!