நெஞ்சம் ஏங்குகிறது..!
![]() |
Tamil Love Kavithai |
நீயும் நானும் போகும் போது
அந்த பாதை இன்னும்
நீள வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குகிறது..!
இருந்து விடாதே..!
அன்பே,
நான் தனியாக கூட
வாழ்ந்து விடுவேன்
ஆனால்,
வாழ்க்கை துணையாக
வருகிறேனென்று
சுமையாக மட்டும்
இருந்து விடாதே..!
இமை மூடினேன்..!
காதலிக்கும் போது
நான் எனக்காக மட்டும்
காதலிக்கவில்லை..!
அவளுக்கான காதலையும்
சேர்த்தே காதலித்தேன்..!
அவளுக்கான கனவையும்
நானல்லவா இமை மூடாமல் கண்டேன்..!
தனக்கானதை யோசித்து
பிரிந்து சென்ற போது
அவளுக்காக இமை மூடினேன்..!
No comments:
Post a Comment