Friday 30 May 2014

Theriyaamal..!

கனவாகி போன
அவளுக்காக கவிதையோடு
வாழுகிறேன்..!

காலம் கரைவது கூட
தெரியாமல்..!



நிழலை அணைக்கின்றேன்..!

என் இதய கூண்டுக்குள்
யாரோ ஒருத்தி
மாட்டிக்கொண்டதாய் உணர்கிறேன்..!
என் கண் இமைகளில் அவள்
ஊஞ்சல் ஆடுவதை ரசிக்கின்றேன்..!
என் சுவாசத்தில்
கலந்து தும்சம் செய்யும்
அவள் வாசத்தை முகர்கின்றேன்..!
என் மனவாசலில்
வந்து வந்து செல்லும்
அவள் நிழலை அணைக்கின்றேன்..!

Kavithaigal About Love

அவள் என்னை
வெறுத்த பின்னாலும்
நான் அவளை நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா..?

ஏனென்றால்,
அவள் தாய் அவளை
வயிற்றில் சுமந்தாள்..!
ஆனால்
நானோ அவளை இதயத்தில்
அல்லவா சுமந்தேன்..!


காதல் கடிதம்..!
உன் மனத்திலுள்ளதை
எனக்கு சொல்லாமலே சொல்லியது,
உன் கைகளால் கசக்க படைத்தும்,
கடமை முடிந்ததும் கழிக்க படடதுமான 
என் காதல் கடிதம்..!

Love Kavithai..!

உன்னை காண
முடியாத நேரங்களில்
எல்லாம் உளறுகிறேன்..!

அதை கவிதை என்ற ஊர்
என்னையும் "கவிஞன்"
என்றதால் வியக்கிறேன்..!


மூச்சி..!
மூச்சி நின்றாள்
மட்டும் மரணம் இல்லை..!
உன்னுடனான பேச்சி
நின்றாள் கூட
மரணம் தான் எனக்கு..!


நான்..நீ..நிழல்..நிஜம்..!!
நான் நிஜமாக  இருந்ததால்
உன்னை நிழலாக 
தொடர்ந்து காதலித்தேன்..!
நான் நிழலாக 
பின்தொடர்ந்ததால் தானோ 
நீ நிஜமாக 
என்னை காதலிக்கவில்லை..!

Thursday 29 May 2014

True Love..!

உன்னை பார்த்து ரசித்த
கண்களோ சோகப்பட்டது..!
உன்னை எண்ணி நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீர் வடிகின்றது..!
கண்கள் சிவகின்றது..!

உன்மேல் காதல்
கொண்ட இதயமோ
பாவப்பட்ட்து..!
ஏனெனில்
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!

Love(kadhal) Sms

உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான் தெரியும்
நினைவுகளின் வலிமை.!

I Love You..!



உன் சுவாசத்தையும்..!
காற்றும் மணக்கிறது!
காரணம்,
அது உன் சுவாசத்தையும்
சேர்த்து சுமந்து வருகிறதே
அதனால் தான்…!


உன் நிழலை..!
சொல்லிவிட எண்ணி
பல நாள் அருகில் வருவேன்..!
உந்தன் பார்வை பார்த்ததும்
அது மட்டும் போதும்
என நினைத்து விலகி விடுவேன்..!
என் மனதில் உள்ளது
தெரிந்தும் விளையாடும் பாவையே,
நீ ஏற்று கொள்வாய் என்றே
தொடர்கிறேன் உன் நிழலை..!

I Love You

Birthday Wishes Collections

நீ பிறந்தநாள்..! 

Birthday Wishes Collections
Birthday Wishes Collections

பூ மணம் மாறாத பூவொன்று 
பூமியில் மலர்ந்த நாள் இன்று..!
வான்மண்டலம் சாராத நிலவொன்று
மண்ணில் தோன்றிய நாள் இன்று..!
கை நீட்டி வாழ வழி காட்டிய வசந்த நாள் 
நாள்காட்டியில் நீ பிறந்தநாள்..! 
பிறப்பின் நொடிகள் மிகவும் வலியானது..!
அதை மீண்டும் காலத்தின் ஓட்டத்தால் 
அடையும் போது மிகவும் அழகானது..! 
இதயத்தில் எழுதிய என் கவிதையே
உன்னை என்றும் என் வரிகள் வாழ்த்தும்..! 
உன் பிறந்தநாளில் ரோஜாவை
உனக்கு பரிசளிக்க விரும்பினேன்- ஆனால்
உன்னை வைத்து கொண்டு 
ரோஜாவை நான் எங்கே போய் தேடுவேன்..! 
அனைத்து நாட்களும் 
நீ பிறந்தநாளை பார்த்து பொறாமைப்படுகின்றன 
நம்நாளில் இவள் பிறக்கவில்லையே என்று..!
வருடத்தில் பல வண்ண பூக்கள் மலரும்
அதில் ஓன்று விடியலில் மலர்ந்த பூ நீயோ..!
தென்றல் காற்றால் மலர்களை உதிர்த்து,
பகலில் வெண்ணிலவை அழைத்து,
இதயத்தால் பெண்ணிலவு உன்னை வாழ்த்துகிறேன்..! 

மரித்து போவதால்..!

எனக்கு தினம் தினம்
பிறந்த நாள் தான்..!
ஒவ்வொரு நாளும்
உன் கண்ண குழியில்
மரித்து போவதால்..!

என் முதல் கவிதை..!

உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல வாசகம்
தேடி தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று
உனக்கான
என் முதல் கவிதை..!

I Love You..!


நீ..!

நானாக நீயிருந்து,
நீ இல்லாமல்,
நான் படும்
வேதனையை,
உணர வேண்டும் நீ..!

LOVE

எனக்கு பூவாக
மலர வரம்
கிடைத்தால் ரோஜாவாகவே
மலருவேன்..!

வேறு பூவாக
அல்ல..!

என்னவளின்
தலையிலாவது
இருப்பேன் அல்லவா..!


ஆயுள் குறைவு..!
Love Failure Boys Words:
காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ
தெரியவில்லை
"பெப்ரவரி"
மாதத்துக்கும் கூட
ஆயுள் குறைவு..!

Love(Kadhal) Sms In Tamil

நீ என்னை கடக்கும்
ஒரு நொடிக்காக காத்திருப்பேன்
பெண்ணே..!
காணலாக அல்ல..!
உன் பாதங்களை வருடும்
நாணலாக..!

என் ஓட்டம்..!
என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி
நித்தமும் ஊசலாடுபவளே..!
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை,
நின்று விடும் என் ஓட்டம்..!


Be careful..!
வார்த்தை தடுமாற
காரணம் கண்கள்,
வாழ்க்கை தடுமாற
காரணம் “பெண்கள்”…
Be careful..!



Love Failure SMS

பிறக்கும் போது
அறியாத வலியும்..!

இறக்கும் தெரியாத
வலியும்..!

நீ என்னை
வெறுக்கும் போது
தெரிந்து கொண்டேன்..!


தாடி..!!
Feeling Corner :
அவள் முத்தமிட்ட இந்த
கன்னங்களில் யாரும் முத்தம்
இடக்கூடாது என்பதற்க்காக
நான் அமைத்த முள் வேலி தான்
இந்த தாடி..!!

Friday 16 May 2014

LOVE FAILURE(KADHAL THOLVI) SMS

உன்னை 1000 பேர்
நினைக்கலாம்..!
ஆனால்
உனக்காக துடிக்கும்
என் இதயத்தை
நீ நினைக்கவும் இல்லை
நேசிக்கவும் இல்லை..!


உணர்ந்தேன்..!
காதல் கசக்கும்
மருந்தென்று தெரியும்..!

ஆனால்
உயிரை பறிக்கும்
விஷம் என்பதை
நீ ஏமாற்றிய
நாட்களில் தான்
உணர்ந்தேன்..!


எருக்கம் பூவாக..!
உன் தலையில்
ரோஜா மலராக
என் நினைவுகள்
இருக்குமென்று விரும்பினேன்..!
ஆனால்,

என் கல்லறையில்
அல்லவா இருக்கின்றன  
எருக்கம் பூவாக
உன் நினைவுகள்..!

வலிமை..!
உன் நினைவுகளை
உட்கொண்டு வாழும்
என் உயிருக்கு தான்
நினைவுகளின் 
வலிமை..!

Wednesday 7 May 2014

LOVE SMS

தொடர வேண்டும்..!

Tamil love kavithai sms
Tamil love Kavithai SMS

கண் விழிக்க ஆசை இல்லை
என் கனவில் நீ இருக்க..
உன்னை துரத்தும்
விடியலை வெறுக்கிறேன்,
விடியாத இரவும்
முடியாத கனவும் வேண்டும்..!
உன்னை கரம் பிடித்து
உலா வரும் கனவு
தொடர வேண்டும்..!


யார் அழகு..!

என் பல நாள்
ஆசைகளில் ஓன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்,
உன்னை வைத்துவிட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!