நட்புக்காக..!
![50+ Friendship Kavithai in Tamil Words 50+ Friendship Kavithai in Tamil Words](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2-hV4ZvIfB2V6Rc9Kal9tPw8qp9ERqzYqObGV2bMpsOz_rVIA2YhDKRg6TMluCoVS-ojZgsTe25aun_BNKJBJrkvdHDJNCm6jGGN3MpsWz6cceQDv0_L5L6WRsf0noRpbDUpbLFPOgxo/s1600/natpu-sms-kavithai.png) |
50+ Friendship Kavithai in Tamil Words |
கண்ணால் பார்த்து
பின்னால் அலைந்து
சாகடிக்காமல் விடாத
சாகும்வரை மறக்காத
காதலை விட,
தன்னால் வந்து
பின்னாளில் உதவும்
சாகவே விடாத
செத்தாலும் மறக்காத
நட்புக்கு ஒரு பாலம் காட்டுங்கள்..!
உன்னை பற்றியே ..!
சந்திக்க நாட்கள் பல
ஆகலாம்-ஆனால்
உன்னை பற்றி
சிந்திக்க ஒரு நிமிடம்
போதும்!
ஒவ்வொரு நிமிடமும்
சிந்திக்கிறேன்
உன்னை பற்றியே ..!
இருக்க முடியாது..!
சுவாசிக்காமல் கூட
பல நொடி
இருந்து விடுவேன்
உன்னை நேசிக்காமல்
ஒரு நொடி கூட
இருக்க முடியாது..!
விட்டு கொடுத்து விடாதே..!
உன் நண்பனுக்காக எதை
வேண்டுமானாலும் விட்டு கொடு..!
ஆனால் ஒருபோதும் உன் நண்பனை மட்டும்
விட்டு கொடுத்து விடாதே..!
பிரிவு என்பது தூரமில்லை..!
புரியாத நட்புக்கு
அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு என்பது தூரமில்லை..!
நான் உன் நண்பன்..!
நண்பன் வெற்றிபெறும் போது
அவன் என் நண்பன் என்று பெருமை கொள்..!
தோல்வி அடையும் போது
நான் உன் நண்பன் என்று அருகில் நில்..!
ஒரு நாள் பிரிந்துவிடும்..!
உயிருடன் ஒருபோதும்
ஒப்பிட மாட்டான் உன் நட்பை
ஏனென்றால்
"உயிர் கூட ஒரு நாள் பிரிந்துவிடும்..!"
ஒரு நிமிடமே போதும்..!
நல்ல நட்பை அமைத்து கொள்ள பல வருடம் போதாது
நல்ல நட்பை எதிரியாக்க ஒரு நிமிடமே போதும்..!
"நண்பர்கள்"
அன்பு என்ற பூ
உங்களிடம் இருந்தால்
நண்பர்கள் என்ற வாசனை
உங்களை சுற்றி வீசி கொண்டே இருக்கும்..!