Tuesday 2 June 2015

Lovely Kavithai

கண் வைக்க..!

Lovely Kavithai in tamil
Lovely Kadhal Kavithai in Tamil
குழந்தை பருவத்தில் 
உன்னை படைத்த பிரம்மன் 
பருவத்தில் பார்த்திருந்தால்
ஒரு கண் வைத்திருந்திருப்பான்
இவ்வளவு அழகான பெண்ணை
நாமா படைத்தோமென்று..!
அப்படியே என்னிடம்
வாங்கியும் கட்டி இருப்பான்..!

யார் அவன்
என் தேவதையை மீது
கண் வைக்க..!


என்றுமே வற்றாது..!

அன்பே,
இமயத்தில் ஊற்றாகும்
கங்கை நதி கூட
ஒருநாள் வற்றி போகலாம்
ஆனால்,
என் இதயத்தில் ஊற்றாகும்
காதல் நதி என்றுமே வற்றாது..!


உன் நட்பிடம்..!

முதலில் நட்பு கொண்டேன்,
பிறகு காதல் கொண்டேன்..!
நட்பு கொண்டது உன்னிடம்,
காதல் கொண்டது உன் நட்பிடம்..!


உணர்ந்து கொண்டேன்..! 

உன் நினைவோடு பேசி பேசி
மௌன மொழி கற்று கொண்டேன்..!
உன்னுடன் கற்பனையில் பேசி பேசி
கனவை வளர்த்து கொண்டேன்..!
உன் விழிகளுடன் பேசி பேசி
காதலை உணர்ந்து கொண்டேன்..! 

No comments:

Post a Comment

Popular Posts