Tuesday 2 June 2015

Dear Natpu..!

உடைந்து விட்டேன்..!

Dear Natpu..!
Dear Natpu..!
ரோஜா இதழாக நீயும்
அதில் முள்ளாக நானும்
அதை தாங்கும் காம்பாக
நம் நட்பும்
இருக்க வேண்டுமென்று
ஆசைபட்டேன்..!
ஆனால் நீயோ
காம்பே வேண்டாமென்று
முள்ளால் குத்தி விட்டதினால்
நானும் உடைந்து விட்டேன்..!


தூரமாகி விடாதே..!

நான் இறைவனிடம் வேண்டுவது ஓன்று மட்டுமே
என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே...
என்னை பிடித்தவர்களிடமிருந்து தூரமாகி விடாதே..!


அழகான கவிதை..!

கூகுளில் தேடி பார்த்தேன்
ரோடுகளில் அலைந்து திரிந்தேன்
புத்தகத்தை படித்து பார்த்தேன்
பூக்களில் முகர்ந்து பார்த்தேன்
விண்ணில் எண்ணி பார்த்தேன்
கண்ணாடியில் என்னை பார்த்தேன்
கிடைக்கவில்லை
நம் நட்பை விட அழகான கவிதை..!


நண்பனை தவிர..!

உதடுகள் சிரிப்பது ஊருக்கே தெரியும்
ஆனால் உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும், நண்பனை தவிர..!


நட்பு ஆகாது..!

விண்ணில் நட்சத்திரங்கள் அனைத்தையும்
ஓன்று சேர்த்தாலும் நிலவு ஆகாது
உலகத்தில் உள்ள உறவுகள் அனைத்தையும்
சேர்த்தாலும் நட்பு ஆகாது..!

No comments:

Post a Comment

Popular Posts