காதல் தோல்வி..!
Love failure Kavithai |
பெண்ணே,
உன் பின்னால் அலைந்து
திரிந்த போதெல்லாம்
கத்தி கத்தி சொன்னாய்
பிடிக்கல என்று..!
எவனோ ஒருவன்
உன் கை பிடித்து
நடக்கும் போது தான்
நான் அதை உணர்ந்தேன்
நீ சொன்னது
வார்த்தை அல்ல
என் இதயத்தை கிழித்த
கத்தி என்று..!
மனசாட்சி..!
மனசாட்சி இருந்தால்
ஒருமுறை, என்னோடு
இருந்த நாட்களை
நினைத்து பார்
உன் கண்களில் இருந்து
ஒருதுளி விழுந்தாலும்
போதும் என் காதல்
புனிதமாகும்..!
No comments:
Post a Comment